திருகோணமலை பாலத்தின் கீழிருந்து 10 குண்டுகள் மீட்பு

283 0

திருகோணமலை, மூதூர் கிளிவெட்டி பாலத்தின் கீழிருந்து 10 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

40 மில்லிமீற்றர் வகையைச் சேர்ந்த கிரேனெற் லோன்சர் ரக சிறிய குண்டுகளே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் நேற்று இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன், தொடர்ந்தும் குண்டு செயலிழப்பு பிரிவுக்கு வழங்கிய தகவலையடுத்து அதிகாரிகள் விரைந்து குண்டுகளை செயலிழப்பு செய்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்தவொரு சந்தேக நபரும் கைது செய்யப்படாத நிலையில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a comment