போதைப்பொருள் வைத்திருந்த 43 வயதான பெண்ணொவர் கைது

228 0

பொரளை, மெகசின் புதிய வீதி பிரதேசத்தில் போதைப்பொருளை வைத்திருந்த பெண்ணொவர் கொழும்பு குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொரளை பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய குறித்த பெண் இன்றைய தினம் மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a comment