ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை – இலங்கை தொடர்பில் இருநாள் விவாதம்

245 0

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், மார்ச் 16 மற்றும் 21 ஆகிய இரு தினங்களும் இலங்கைத் தொடர்பான இரண்டு முக்கிய விவாதங்கள் இடம்பெறவுள்ளன.

பூகோள கால மீளாய்வு கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட்ட அறிக்கைகளின் அடிப்படையில் இலங்கை பெனின், பாகிஸ்தான், சாம்பியா, ஜப்பான், உக்ரேன் ஆகிய நாடுகள் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கைகள் மீதே மார்ச் 16ஆம் திகதி விவாதம் நடத்தப்படவுள்ளது.

அதேவேளை இலங்கை தொடர்பாக, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் வாய்மொழி அறிக்கை மார்ச் 21ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயத் ரா-அத் அல் ஹுசைன் இலங்கைத் தொடர்பாக முக்கிய உரையாற்றுவார் என எதிர்ப்பார்க்ப்படுகின்றது

Leave a comment