ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் அரசாங்கமொன்று அமையுமாயின் கூட்டு எதிர்க் கட்சியினர் நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக தெரிவித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக பந்துல குணவர்தன எம்.பி. தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி அல்லாத ஒரு குழு ஆட்சியமைக்குமாயின் தாம் ஆதரவு வழங்குவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தோம். தற்பொழுது கூட்டு எதிர்க் கட்சித் தலைவர் தினேஷ் குணவர்தனவின் கையொப்பத்தில் ஜனாதிபதிக்கு இக்கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.