முக்கிய தீர்மானங்களுடன் இன்றிரவு ஜனாதிபதியை சந்திக்கவுள்ள பிரதமரும், சபாநாயகரும்

227 0

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சபாநாயகர் கரு ஜயசூரியவும் இன்று (18) மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்கவுள்ளனர்.

இந்த சந்திப்பு இன்று (18) இரவு இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்ட விசேட கூட்டம் இன்று காலை சிறிக்கொத்தவில் நடைபெற்றதன் பின்னர் பிரதமரும் சபாநாயகர் கரு ஜயசூரியவும் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளமை அரசியல் நடவடிக்கைகள் குறித்த முக்கிய தீர்மானங்களை முன்னெடுப்பதற்காகும் எனவும் அவ்வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை,  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றைய நாள் (18) முழுவதும் பொலன்னறுவையில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதுடன், இன்று மாலையிலேயே அவர் கொழும்பு திரும்பவுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Leave a comment