ஆற்றில் விழுந்த கார் – 2 பேர் பலி

185 0

லிந்துலை மற்றும் தலவாக்கலை ஆகிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பெயார்வெல் பகுதியில் இன்று மாலை 3 மணியளவில் கார் ஒன்று வீதியை விட்டு விலகி 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர்வழங்கும் ஆக்ரோயா ஆற்றில் பாய்ந்தே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்கள் கம்பஹா பகுதியைச் சேர்ந்த பியூமிசாந்த் பிரசாதி பெரேரா வயது 24 என அடையாளம் காணப்பட்டுள்ள அதேவேளை, உயிரிழந்த இளைஞன் தொடர்பில் இதுவரை தகவல்கள் வெளியாகவில்லை.

நுவரெலியா பகுதியிலிருந்து கம்பஹா பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்த காரே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. காரில் இளைஞரும், யுவதியும் மாத்திரம் பயணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதோடு, உயிரிழந்த இருவரின் சடலங்களும் லிந்துலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment