கொள்கலன் மோதியதில் ஒருவர் பலி

336 0

கொழும்பு – சிலாபம் பிரதான வீதியில் கல்கந்த புகையிரத கடவைக்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொள்கலன் ஒன்று வீதியில் பயணித்த ஒருவர் மீது மோதியமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் 65 வயதுடைய வயோதிபரொருவராவார்.

இவ்விபத்து தொடர்பிடைய கொள்கலன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment