எவன்கார்ட், ரக்னா லங்கா வழக்கு விசாரணை நாள் அறிவிப்பு

311 0

எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிஷ்ஷங்க சேனாதிபதி மற்றும் ரக்னா லங்கா நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் பாலித பிரணாந்து ஆகியோருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள இன்று (09) தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உயர்நீதிமன்ற நீதிபதி குருசிங்க முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

2012-2014 ஆகிய வருடங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரிய ஊழல் மோசடி சம்பவங்கள் தொடர்பில் இவர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Leave a comment