நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளிலும் தரம் 6 தொடக்கம் உயர்தரம் வரையிலான வகுப்புக்களுக்கு மடிக்கணினிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் தெரவித்துள்ளார்.
மடிக்கணினிகளை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் இரண்டு மாதங்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
சர்வதேச ரீதியில் தற்போது கல்வி நடவடிக்கைகள் தொழில்நுட்பமயப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது இலங்கையிலும் கல்வி நடவடிக்கைகளை தொழில்நுட்ப ரீதியில்
முன்னெடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அகில விராஜ் தெளிவுபடுத்தியுள்ளார்.