தீர்வு இன்றேல் முன்னறிவித்தல் இன்றி வேலை நிறுத்தம் – GMOA

309 0

தமது பிரச்சினைகளுக்கு எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் தீர்வு கிடைக்காவிட்டால் முன்னறிவித்தலின்றி வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கப் போவதாக இன்று(15) இடம்பெற்ற அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற அச்சங்கத்தின் அவசர மத்திய செயற்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 22ஆம் திகதிக்குப் பின்னர் முன் அறிவிப்பு இன்றி வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அச்சங்கம் அறிவித்துள்ளது.

Leave a comment