யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா சென்ற வௌிநாட்டுப் பிரஜை உயிரிழப்பு

277 0

ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலாவுக்காக சென்ற பிரஜை ஒருவர் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

ஜேர்மனியைச் சேர்ந்த 63 வயதுடைய எகேன் செபினே (Ecken Sebienne) என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 07ம் திகதி அவர் தனது மனைவியுடன் யாழ்ப்பாணத்திற்கு சென்று பல்வெறு இடங்களை சுற்றிப் பார்க்க சென்றுள்ளதுடன், திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென ஏற்பட்ட மாரடைப்பே அவரின் உயிரிழப்புக்கு காரணம் என மரண விசாரணை அறிக்கையில் தெரிய
வந்துள்ளதுடன், குறித்த வெளிநாட்டு பிரஜையின் சடலம் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment