ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களுடன் நிறைவு

4410 20

ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களுடன் நிறைவடைவதாக உயர் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தனது பதவிக்காலம் ஐந்து வருடங்களா அல்லது ஆறு வருடங்களா என கேட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உயர்நீதிமன்றத்தில் விளக்கம் கோரியிருந்ததுடன் அது தொடர்பில் தீர்மானிக்க ஐவரடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment