நாமல் உள்ளிட்ட 6 பேருக்கெதிரான வழக்கு பெப்ரவரியில்

279 0

நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பெருக்கெதிராக தொடரப்பட்டிருக்கும் வழக்கு எதிர்வரும் பெப்ரவரி 6ம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் உத்தரவிட்டுள்ளார்.

மனு அறிக்கைகளை பிரதிவாதிகளுக்கு வழங்குவதற்காக குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்ததுடன் குறித்த ஆவணங்களை வழங்குவதற்கு தமக்கு கால அவகாசம் வழங்குமாறு அரச தரப்பு சட்டத்தரணி மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டதை ஏற்று நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Leave a comment