தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் கைது!

216 0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் இருவர் யாழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் மாநகர சபையில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் முன்னாள் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்சானந்தின் ஆதரவாளர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ் பல்கலைக்கழம் அண்மித்த பகுதிகளில் அதாவது தர்சானந் போட்டியிடும் தொகுதியில் அவருடைய போஸ்டர்களை ஓட்டிக் கொண்டிருந்த ஆதரவாளர்களே வீதியால் ரோந்து சென்ற பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் யாழ் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும் இன்று நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a comment