திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஜெயபுர பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார்.
படுகாயமடைந்தவர் திருகோணமலை பொது வைத்தியசாலை அதிதீவிர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்த 24 மற்றும் 53 வயதுடைய நபர்களே விபத்துக்குள்ளாகி உள்ளார்கள்.
கிண்ணியா பிரதேசத்தில் இருந்து தம்பலகாமம் நோக்கி இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பயணித்த அவ்விருவரும் முன்னால் சென்ற வாகனத்தை முந்திச்செல்ல முட்பட்ட வேளையில் எதிரே வந்த பெற்றோலிய பவுசருடன் மோதியதில் விபத்து நேர்ந்துள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.