தேர்தல் பிரச்சாரத்துக்கு மஹிந்த ராஜபக்ஷவின் முகம் அவசியமற்றது- துமிந்த பாய்ச்சல்

363 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முகம் அவசியமற்றது எனவும், அவ்வாறு அபேட்சகர்கள் அவரின் படத்தை வேட்பாளர்களின் புகைப்படத்துடன் வெளியிடுவதற்கு கட்சி எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லையெனவும் ஸ்ரீ ல.சு.க.யின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அபேட்சகர்கள் மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்தையும் தமது படத்துடன் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தலாம் என மேல் மாகாண சபை முதலமைச்சர் இசுர தேவப்பிரிய அறிவித்திருந்தார்.

இது குறித்து கருத்துத் தெரிவிக்கையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது இசுரவின் தனிப்பட்ட கருத்து, கட்சியின் கருத்தல்ல எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment