நல்லாட்சி என்று ஒரு மண்ணும் கிடையாது – நடப்பது இராணுவ ஆட்சியே!

304 0
 

இங்கே நல்லாட்சி என்று ஒரு மண்ணும் கிடையாது. இங்கே அடக்குமுறை இராணுவ ஆட்சியே நடக்கின்றது என சட்டத்தரணியும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளளுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்.முற்றவெளியில் விகாராதிபதியின் பூதவுடலை தகனம் செய்ய யாழ்.நீதிவான் நீதிமன்றம் அனுமதியை வழங்கியிருக்கின்றது. யாழ்.ஆரியகுளம்- நாகவிகரை விகாராதிபதி இயற்கை எய்திய நிலையில் அவரது பூதவுடலை யாழ்.முற்றவெளியில் தகனம் செய்வதற்கு இராணுவம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதனை எதிர்த்து தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்ன சிங்கம் தலமையில் 12 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

இது தொடர்பாக வழக்கில் ஆஜரான சட்டத்தரணி மணிவண்ணன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment