கைப்பேசியை காதில் வைத்து புகையிரதத்தை கண்டும் அசட்டையாக சென்ற சாரதி : ஒருவர் பலி – மூவர் காயம்

249 0
நீர்கொழும்பு – கட்டுவ பிரதேசத்தில் பயணிகள் புகையிரதத்தில் மோட்டார் வாகனம் ஒன்று மோதியதில் அதில் பயணித்த ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் பலத்த காயமடைந்த மூன்று பேர் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிலாபத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சாதாரண புகையிரதம் நீர்கொழும்பு – கட்டுவ பகுதியில் கடந்த போது கடவையில் நுழைந்த வாகனம் மோதுண்டதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

எவ்வாறாயினும், அனர்த்தம் இடம்பெற்ற தருணத்தில் 4 பேர் வாகனத்தினுள் பயணித்த நிலையில் ஒருவர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

மற்றைய மூன்று பேரும் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புகையிரத பாதையில் இருந்த நெனோ வாகனம் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வாகனத்தை செலுத்தியவர் கைத்தொலைபேசியை காதில் வைத்த வண்ணம் சென்றதுடன் பாதசாரிகள் எச்சரித்தும் அவதானிக்காது சென்றதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Leave a comment