இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட எரிபொருள் தரமற்றது – பரிசோதனை முடிவு

332 0

இலங்கை பெற்றோலியக் கூட்டுதாபனம் ஊடாக இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட விமானத்திற்கான எரிபொருள் தரமற்றது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட ஆய்வின் மூலம் இது தரமற்ற எரிபொருள் என தெரியவந்துள்ள போதும்,இரண்டாம் நிலை பரிசோதனைகள் செய்யப்பட்டு வருவதாக பெற்றோலிய வள அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் விமானங்களுக்கான தரமற்ற எரிபொருளை சந்தையில் விநியோகிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

10,000 மெட்றிக் தொன் எரிபொருள் தொடர்பில் தற்​போது இரண்டாம் கட்ட பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருதாகவும் அவர் தெரிவித்தார்.

அதன் முடிவுகளைப் பொறுத்து குறித்த எரிபொருள் தொகைப் பற்றி முடிவு எடுக்கப்படும் எனவும் குறித்த எரிபொருள் இந்தியன் எண்ணெய் நிறுவனத்திடம்(IOC) இருந்து கொண்டுவரப்பட்டது என வெளிவரும் தகவல்களை நிராகரிப்பதாகவும் அமைச்சின் செயலாளர் உபாலி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது இலங்கையில் விமான எரிபொருள் விற்பனை அதிகரித்துள்ளதாகவும்,இதற்கமைய 2 எரிபொருள் கப்பல்கள் கோரப்பட்டுள்ளதுடன்,இதில் ஒரு கப்பல் 20,000 மெட்றிக் தொன் எரிபொருளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதால் விமான எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment