மின்சார சபையின் நிரந்தர தொழிலாளர்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம்

229 0

மின்சார சபையின் நிரந்தர தொழிலாளர்கள் சங்கம் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டம் கொழும்பில் உள்ள மின்சாரசபை தலைமைக் காரியாலயத்தில் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

சம்பள உயர்வு, மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் அரசியல் தலையீடுகளுடன் மின்சார சபையில் தொழில் வழங்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் போன்ற காரணங்களை முன்வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்வைக்கப்படுகிறது.

ஓரிரு நாட்களில் தமக்கான தீர்வுகள் வழங்கப்படவில்லை எனில் நாடு பூராகவும் பாரிய பேரணிகளை நடத்தவுள்ளதாகவும் மின்சார சபையின் நிரந்தர தொழிலாளர்கள் சங்க பிரதிநிதிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Leave a comment