நாட்டை பிரிப்பதற்கு எதிராகவே எமது போராட்டம் – கோத்தாபய

275 0

நாட்டை பிரிப்பதற்கு எதிராகவே தமது போராட்டம் இருப்பதாகவும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கவிட்டால் நாடு பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும் எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலியில் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அதிகாரப்பகிர்வின் மூலம் இந்நாட்டில் வேறொரு அரசை நிறுவ முயற்சிப்பதாகவும், நூற்றுக்கு 68 வீதமான மக்கள் வேறு பிரதேசங்களில் இருப்பதாகவும் குறித்த பிரதேசத்திற்கு மாத்திரம் அதிகாரப்பகிர்வு வழங்குவதன் மூலம் ஏனைய மக்களின் பிரச்சனைகளை கண்டறிய முடியாமல் போவதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் “எழிய” அமைப்பை இனவாத அமைப்பாக அறிமுகப்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும், நாட்டின் அனைத்து மக்களும் கௌரவமாக வாழ வேண்டும் என்பதே தமது நோக்கம் எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment