உப பொலிஸ் பரிசோதகர்கள் 3029 பேருக்கு பதிவு உயர்வு

222 0

உப பொலிஸ் பரிசோதகர்கள் 3029 பேருக்கு பதிவு உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க மேற்கொண்ட நடவடிக்கைமைய இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

பொலிஸ் சேவையில் சிக்கலாக காணப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர்களின் பதவி உயர்வு நடைமுறையை முறையாக மற்றும் விரைவாக மேற்கொள்ள அமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். அமைச்சர் சாகல ரத்நாயக்க, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானம் நாளை (07) தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கப்படவுள்ளது.

இதேவேளை, 08 வருடங்கள் பெண் உப பொலிஸ் பரிசோதகர்களாக கடமையாற்றிய 320 பேருக்கும் பொலிஸ் பரிசோதகர்களாக பதிவு உயர்வு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment