யேமனில் தற்கொலை தாக்குதல் – 60 பேர் பலி

359 0

800x480_IMAGE57308774தெற்கு யேமனில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 60ஆக அதிகரித்துள்ளது.

ஏடன் நகரில் உள்ள இராணுவ முகாம் ஒன்றை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இந்த முகாம் அரசாங்க ஆதரவு படையினரின் பயிற்சி நிலையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை ஐ.எஸ். தீவிரவாதிகளே நடத்தியுள்ளனர்.

யேமனில் சவுதி ஆதரவு அரசாங்க படையினருக்குமு;, சியாஹோத்தி தீவிரவாதிகளுக்கும் இடையில் கடந்த 17 மாதங்களாக மோதல் இடம்பெற்று வருகிறது.

இதில் 6 ஆயிரத்து 600க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மோதல்களை நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.