அரச சொத்துக்களை விற்பனை செய்யும் வேலைத்திட்டம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜே வி பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நட்டம் ஏற்பட்டுள்ள அரச நிறுவனங்களை லாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றும் எண்ணம் அரசாங்கத்திடம் இல்லை.
இவை ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் நட்டம் ஏற்பட்டதாக அரசாங்கம் குற்றம் சுமத்தி வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.