ஜனாதிபதி இணையத்தை முடக்கியவர் கைது

323 0

webhackஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை முடக்கி, போலியான தகவல்களை பிரசுரித்த சம்பவம் தொடர்பில், சந்தேகத்தின் பேரில் 17 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் ஜனாதிபதி இணைத்தளம் முடக்கப்பட்டிருந்தது.

இது குறித்த விசாரணை நடத்திய குற்றப் புலனாய்வு பிரிவு, கடுகன்னாவைப் பகுதியைச் சேர்ந்த 17 வயதான ஒருவரை கைது செய்தது.

அதேநேரம் இது குறித்த மேலதிக விசாரணைகளை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.