தாம் ஆரம்பித்ததையே மஹிந்த திறந்து வைத்தார் – சந்திரிக்கா சாடல்

303 0

d534c06c79372a97730c8af524aa9b8c_L-520x303தமது ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பாரிய வேலைத்திட்டங்கள், கடந்த காலங்களில் மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா தெரிவித்துள்ளார்.

தாம் ஆரம்பித்த பல வேலைத்திட்டங்களை தற்போதைய அரசாங்கம் திறந்து வைப்பதாக மஹிந்த ராஜபக்ஷ கூறி இருந்தார்.

இதற்கு பதில் வழங்கும் வகையிலேயே சந்திரிக்கா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மஹிந்தவினால் திறந்து வைக்கப்பட்ட பல வேலைத்திட்டங்கள், தம்மால் தமது ஆட்சியில் ஆரம்பிக்கப்பட்டவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.