வெளிநாட்டு முதலீட்டின் காரணமாக இலங்கை நெருக்கடியில்.

306 0

lalkantha_bஇலங்கை, வெளிநாட்டு முதலீட்டின் காரணமாக நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஜே வி பியின் மத்திய குழு உறுப்பினர் கே டீ லால்காந்த இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதலீடு செய்வதற்காக அழைப்புகள் விடுக்கப்படுகின்றன.

இலங்கையில் கடன் மற்றும் முதலீடுகள் அனைத்தும் வெளிநாட்டு நாணயங்களிலேயே செய்யப்படுவதாக தெரிவித்த அவர், இதன்மூலம் இலங்கையில் உள்ள நிறுவனங்கள் மற்றும் உற்பத்தி சூழ்நிலைகளை வெளிநாடுகள் சூறையாட வாய்ப்பளிக்கப்படுவதாகவும் கே டீ லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.