தமிழ் மக்களை அல்-குவைதா அமைப்பில் சேர்த்துகொள்ள முயற்சி?

338 0

dc-Cover-6rplrr23p6mgsfm26l5elqt6h7-20160425074409.Medi_இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் தமிழ் மற்றும் மலையாளம் பேசுபவர்களை அல்-குவைதா தீவிரவாத அமைப்பில் இணைத்துக்கொள்ளும் திட்டம் ஒன்றுக்கு முற்சிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

த ஏசியன் ஏஜ் செய்திச் சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாகவே அல் குவைதா அமைப்பு இலங்கை மற்றும் தென்னிந்தியாவில் ஆட்சேர்ப்புக்களை மேற்கொண்டுள்ளது.

இவற்றில் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் மொழிப்பெயர்ப்புகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மொழிப்பெயர்ப்புக்களுக்கு பெரும்பாலும் அல் குவைதாவில் இணைந்துள்ள தென்னிந்தியாவை சேர்ந்தவர்களே உதவியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.