பான் கீ மூன், சீ வியை தனிப்பட்ட முறையில் சந்திக்கமாட்டார் – இந்திய ஊடகம்

374 0

Vigneshwaran-013 நாள் உத்தியோக பூர்வ விஐயத்தை மேற்கொண்டு இலங்கை வரும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தனிப்பட்ட முறையில் வடமாகாண முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரனை சந்திக்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘த இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

எனினும் தமிழ் தலைவர்களுடனான கூட்டு சந்திப்பின் போது அவர்; சீ வி விக்னேஸ்வரனையும் சந்திப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 2ஆம் யாழ்ப்பாணத்திற்கு செல்லும் அவர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை சந்திக்கவுள்ளார்.

அத்துடன் யுத்தம் காரணமாக தொடர்ந்தும் முகாம்களில் தங்கியிருக்கும் மக்களையும் நேரடியாக சந்தித்து அவர் உரையாடவுள்ளார்.

இதுதவிர பான் கீ மூன் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் இலங்கையில் இனங்களுக்குகிடையில் உள்ள ஒற்றுமை குறித்து அதிக கவனம் செலுத்துவார் எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.