தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பிரயஞ்சித் விதாரன பதவி விலகினார்!

230 0
தேசிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் பிரயஞ்சித் விதாரன தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற கட்சியின் அரசியல் சபை கூட்டத்திலேயே அவர் தனது இராஜினாமா கடிதத்தைக் கையளித்துள்ளதாக, அக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முசாமில் குறிப்பிட்டுள்ளார்.

தனிப்பட்ட மற்றும் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினை காரணமாக, அவர் இந்த முடிவை எடுத்துள்ளார் என, முசாமில் மேலும் கூறியுள்ளார்.

அத்துடன், அவரது பதவிக்கு சட்டத்தரணி கபில கமகே பரிந்துரைக்கப்பட்டு, தேர்தல்கள் ஆணையகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave a comment