சிறுபான்மை இனங்கள் பிரச்சினைகளை தட்டிக் கேட்க வேண்டும்!

233 0

தமிழ் மற்­றும் முஸ்­லிம் மக்­க­ளா­கிய நாங்­கள் தமிழ் பேசு­கின்­ற­வர்­க­ளாக அடக்கி ஒடுக்­கப்­பட்ட சிறு­பான்மை இனங்­கள் என்ற அடிப்­ப­டை­யில் எங்­க­ளுக்­கான பொது­வான பிரச்­சி­னை­க­ளைத் தட்­டிக்­கேட்­கின்ற தைரி­யத்­து­டன் முன் செல்­ல­வேண்­டும்.

இவ்­வாறு தெரி­வித்­தார் வவு­னியா மாவட்ட இலங்­கைத் தமி­ழ­ர­சு­கட்­சி­யின் தலை­வ­ரும் வடக்கு மாகா­ண­சபை உறுப்­பி­ன­ரு­மான மருத்­து­வர் ப.சத்­தி­ய­லிங்­கம்.

வவு­னியா மாவட்ட முஸ்­லிம்­க­ளுக்­கும் இடையே சிறப்புச் சந்­திப்பு ஒன்று இடம்­பெற்­றது.

இந்­தச் சந்­திப்­பில் கலந்­து­ கொண்டு கருத்­துத் தெரி­வித்த போதே ப.சத்­தி­ய­லிங்­கம் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தார்.அவர் தெரி­வித்­த­தா­வது:

கடந்த காலத்­தில் இடம்­பெற்ற கசப்­பான விட­யங்­களை மறந்து வவு­னி­யா­வில் தமிழ் மக்­கள் முஸ்­லிம் மக்­க­ளின் நல்­லு­ற­வைக் கட்­டி­யெ­ழுப்­ப­வேண்­டும்.

இன்­றைய இந்­தக் கலந்­து­ரை­யா­டலை மேற்­கொள்­ள­வி­ட­மால் பலர் தடுக்கின்ற னர் என என்­னி­டம் தெரி­விக்கப்பட்டது. வடக்கு மாகா­ண­ச­பை­யின் தேர்­த­லின்­போது எனக்கு மூவின மக்­க­ளி­னு­டைய வாக்­கு­க­ளும் கிடைத்­தன.

எனது வெற்­றிக்­காக முஸ்­லிம் நண்­பர்­கள் பலர் என்­னு­டன் வீடு வீடாக நடந்து திரிந்­துள்­ள­னர். சிறு­பான்மை இனத்­த­வர்­கள் என்ற ரீதி­யில் எங்­க­ளுக்குப் பொது­வான பல பிரச்­சி­னை­கள் உள்­ளன. பொது­வான தேவை­கள் நிறைய இருக்­கின்­றன.

கொக்கிளாய் வயல்காணி விவகாரத்தில் தொடர்ந்தும் இழுபறி நாங்­கள் ஒன்­றாக நின்­றால் எங்­க­ளுக்­கி­டையே இருக்­கின்ற புரிந்­து­ணர்வு நாள்­பட நாள்­படச் செறி­வா­கும்.

தமி­ழ­ர­சுக்­கட்­சி­யு­டன் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பு­டன் கடந்த 2013ஆம் ஆண்­டி­லி­ருந்து முஸ்­லிம் சகோ­த­ரர்­கள் பலர் வேலைத்­திட்­டத்­தில் ஈடு­பட்­டுக் கொண்­டி­ருக்­கின்­றார்­கள்.

இன்­றைய கலந்­து­ரை­யா­டல் ஆணித்­த­ர­மான சில கருத்­துக்­களை எடுக்­கின்ற, தமிழ்­பே­சு­கின்ற மக்­க­ளாக நாங்­கள் பொது­வான பிரச்­சி­னை­களை எதிர்­கொள்­வ­தற்குத் தயார்ப்­ப­டுத்து­கின்ற கூட்­ட­மா­க­வும் இது இருக்­கும் என நம்­பு­கின்­றேன்.- என்­றார்.

Leave a comment