தேங்காய் திருடனை கீழிறக்குவதற்காக பட்டாசு கொழுத்திய பொலிஸார்

300 0

வாரியாபொல, மினுவன்கெவ பிரதேசத்தில் உள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் திருட்டுத் தனமாக தென்னை பறித்துக் கொண்டிருந்த ஒருவரை பிடித்து தோட்டத்தில் உரிமையாளரால் பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

மினுவன்கெவ, கெட்டபலுகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரால் பறிக்கப்பட்ட தேங்காய்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

நேற்று மாலை தனது தோட்டத்தை கண்காணிக்க சென்ற அதன் உரிமையாளர் தென்னை மரத்தில் இருந்த திருடனைக் கண்டுள்ளதுடன், பின்னர் சத்தமிட்டு பக்கத்தில் உள்ளவர்களை அழைத்து திருடனை தப்பிச் செல்ல விடாமல் சுற்றிவளைத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்ததன் பின்னர் திருடன் மரத்தில் இருந்து இறங்க மறுத்துள்ள நிலையில் மூன்று மணித்தியாலங்களாக போராடிய பொலிஸார், திருடனை பயமுறுத்துவதற்காக வான வேடிக்கை பட்டாசை செலுத்தியுள்ளனர்.

பின்னர் திருடன் மரத்தில் இருந்து இறங்கியதையடுத்து பொலிஸார் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாரியாபொல பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.

Leave a comment