கிந்தோட்டை சம்பவம்; தற்போது முழுமையான கட்டுப்பாட்டில்

284 0

காலி, கிந்தோட்டை பிரதேசத்தில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை நிலமை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் அப்பிரதேசத்தில் தற்போது அமைதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்க கூறினார்.

சம்பவம் இடம்பெற்ற உடனே தான் பொலிஸ் மா அதிபருக்கு தொலைபேசி மூலம் தேவையான அனைத்து ஆலோசனைகளையும் வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.

தற்போது பாதுகாப்பை உறுதிப்படுத்தி நிலமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டியிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

அதேவேளை ஜனாதிபதி மற்றும் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைப்படி ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டதாக கூறியுள்ள அமைச்சர் இனவாத மோதலை ஏற்படுத்துவதற்கு சில அரசியல் கும்பல் முயற்சிப்பது தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார்.

சில கும்பல்கள் பேஸ்புக் மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக போலி வீடியோக்களை பகிர்ந்து கொண்டிருப்பதாகவும், மதவாத, இனவாத மோதல்களை எற்படுத்தும் நோக்கில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் அனைவரையும் தராதரம் பார்க்காது சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் சாகல ரத்னாயக்க கூறினார்.

Leave a comment