இலங்கை வந்த அவுஸ்திரேலிய கடற்படைக் கப்பல் நாடு திரும்பியது!

300 0

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த அஸ்திரேலிய நியூகாஸ்ரல் என்ற கடற்படைக்கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை நிறைவுசெய்துகொண்டு நாடு திரும்பியது.

கடந்த 14 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அஸ்திரேலிய கடற்படை கப்பல் நேற்று அவுஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்டது.

இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதையுடன் அவுஸ்திரேலிய கடற்படைக்கப்பலை வரவேற்றனர்.

இக்கப்பல் இலங்கையில் நங்கூரமிட்டிருந்த காலத்தில் கப்பலின் ஊழியர்கள் இலங்கை கடற்படையினர் ஏற்பாடுசெய்த பல நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்து.

 

Leave a comment