தமிழ்த் தே­சி­யக் கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டு ­வது அநே­க­மாக நிச்­ச­ய­மா­கி­விட்­டது!

635 0
 

தமிழ்த் தே­சி­யக் கூட்­ட­மைப்பு பிள­வு­ப­டு ­வது அநே­க­மாக நிச்­ச­ய­மா­கி­விட்­டது. முன்­னர் எதிர்­பார்த்­த­படி ஈ.பி.ஆர்.எல்.எவ்.கட்சி கூட்­ட­மைப்­பி­லி­ருந்து வில­கித் தனி­வ­ழி­யில் செல்­வ­தற்­குத் தீர்­மா­னித்து விட்­டது. இனி­மேல் வேறு எவ­ரு­ட­னா­வது கூட்­டணி அமைப்­ப­தற்­கான பேச்சில் அந்­தக் கட்சி ஈடு­ப­டப் போகின்றது.

ஆனால் சில்­லறை விட­யங்­க­ளுக்­காக கூட்­ட­மைப்பு பிள­வு­பட முடி­யா­தெ­ன­ வும், ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலை­வர் சுரேஷ் பிரே­மச்­சந்­தி­ர­னு­டன் தாம் பேச­வுள்­ள­தா­க­வும் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரான சம்­பந்­தன் தெரித்­துள்­ளார். எந்த நம்­பிக்­கை­யின் அடிப்­ப­டை­யில் அவர் இவ்­வாறு கூறி­னார் என்­பது தெரி­ய­வில்லை.

கூட்­ட­மைப்­பைத் தொடர்ந்து  விமர்­சித்து வரும்  ஈ.பி.ஆர்.எல்.எவ்.

ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலை­வர் சுரேஷ் பிரே­மச்சந்­தி­ர­னும் அந்­தக் கட்­சி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சிவ­சக்தி ஆனந்­த­னும் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரை­யும், கூட்­ட­மைப்­பை­யும் குறை­கூ­று­வ­தைத் தமது வழக்­க­மா­கக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

இவர்கள் கூட்­ட­மைப்­பில் இருந்து கொண்டே கூட்­ட­மைப்பை விமர்­சித்து வந்­ததை எந்த வகை­யி­லும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. சபா­நா­ய­க­ரி­டம் சம்­பந்­தன் தொடர்­பாக முறைப்­பாடு செய்­யும் அள­வுக்கு சிவ­சக்தி ஆனந்­தன் அர­சி­ய­லில் கீழி­றங்­கிச் சென்­றி­ருக்­கக் கூடாது.

ஈ.பி.ஆர்.எல்.எப்.கட்­சி­யைச் சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் , மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளும் தேர்­தல்­க­ளில் தமி­ழ் அரசுக்­கட்­சி­யின் வீட்­டுச் சின்­னத்­தில் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றுள்­ள­னர். தமி­ழ் அரசுக் கட்­சி­யின் பொதுச் செய­லா­ளர் இவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுத்­தால் இவர்­கள் தமது பத­வி­க­ளைக் கூட இழக்க வேண்­டிய நிலை உரு­வா­கி­வி­டும்.

மேலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் திடீ­ரென இந்த முடி­வுக்கு வந்­த­தா­கத் தெரி­ய­வில்லை. நீண்ட கால­மா­கத் திட்­ட­மிட்டு தரும் பார்த்து இந்த முடி­வுக்கு வந்­த­தா­கவே எண்­ணத் தோன்­று­கின்­றது.

வடக்­குக் கிழக்­கில் உள்ள தமிழ் மக்­க­ளின் பெரும் அபி­மா­னத்­தைப் பெற்­ற­தால், கூட்­ட­மைப்­புக்கு இந்த நாட்­டில் மட்­டு­மல்­லாது அயல் நாடு­க­ளி­லும் மதிப்பு அதி­க­மாக உள்­ளது. தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னை­கள் தொடர்­பா­கக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் சம்­பந்­த­னு­டன் கலந்­து­ரை­யா­டு­வதை இங்கு வருகை தரு­கின்ற அயல் நாட்டு இரா­ஜ­தந்­தி­ரி­கள் ஒரு வழக்­க­மா­கவே கொண்­டுள்­ள­னர்.

இலங்கை அர­சும் கூட்­ட­ மைப்­புக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்து வரு­கின்­றது. இந்த நிலை­யில் அந்த அமைப்பு பிள­வு­ப­டு­மா­னால் அதன் மதிப்­புக்­குப் பெரும் பின்­ன­டைவு ஏற்­பட்டு விடும்.

தமி­ழர்­கள் தம்­மி­டையே பிள­வு­ப­டு­வது எதி­ரிக்கு வாய்ப்­பாக ஆகி­வி­டும்

தமி­ழர்­கள் மேலும் மேலும் பிளவு பட்டு நிற்­பது எதி­ரி­க­ளுக்­குச் சாத­க­மாகி விடும். தேர்­தல்­கள் வரு­வ­தை­யொட்டி கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான சக்­தி­கள் தம்மை ஒன்­றி­ணைப்­ப­தற்­கான முயற்­சி­க­ளில் ஈடு­பட்­டுள்­ளன. தேர்­தல்­க­ளின் மூல­மா­கக் கிடைக்­கப்­போ­கின்ற ஆச­னங்­களை மட்­டுமே அவை இன்று கணக்­குப் போ­டு­கின்­றன. தமி­ழர்­க­ளின் ஒற்­றுமை சிதைக்­கப்­ப­டு­வது தொடர்­பாக இந்­தச் சக்­தி­கள் எள்­ள­ள­வும் கவ­லைப்­ப­டு­வ­தில்லை.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு தகுந்த பாடம் புகட்­டு­வோம் என யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக மாண­வர் ஒன்­றி­யம் கடு­மை­யாக எச்­ச­ரித்­துள்­ளது. அர­சி­யல் கைதி­க­ளின் உணவு ஒறுப்புப் போராட்­டம் தொடர்­பில் முடிவு ஒன்றை எட்­டு­வ­தற்­கான அடுத்த கட்ட நட­வ­டிக்கை தொடர்­பாக ஆராய முன்­வ­ரு­மாறு ஒன்­றி­யத்­தி­னர் விடுத்த அழைப்பை நிரா­க­ரித்து, கூட்­ட­ மைப்­பின் பெரும்­பா­லான நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் குறித்த கூட் டத்­துக்கு சமூ­கம் தர­வில்லை.

இதன் கார­ண­மா­கவே மாண­வர் ஒன்­றி­யத்­தின் சீற்­றம் கூட்­ட­மைப்­பின் பக்­கம் திரும்­பி யுள்­ளது. இது தொடர்­பா­கக் கூட்­ட­ மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் க­ளின் கருத்து என்­ன­வென்று இது­வரை தக­வல் வெளி­வ­ர­வில்லை.

பல்­க­லைக்­ழக மாண­வர் 
சமூ­கத்­தின் எதிர்ப்பை 
எதிர்­நோக்­கப்­போ­கும் கூட்­ட­மைப்பு

ஆனால் வடக்­கில் இடம்­பெ­றப் போகும் தேர்­தல்­க­ளில் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளின் எதிர்ப்பை கூட்­ட­மைப்பு எதிர்­கொள்ள வேண்டி நேரி­டும் என்­ப­தைச் சொல்­லத் தேவை­யில்லை. கடந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லின்­போ­தும் இவ்­வா­றான தொரு நிலையே காணப்­பட்­டது. அத­னால் கூட்­ட­மைப்­பி­ னர் இது தொடர்­பா­கப் பெரி­தாக அலட்­டிக்­கொள்ள மாட்­டார்­க­ளென நம்­ப­லாம்.

கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக அமைக்­கப்­ப­டப்­போ­கும் பொது எதி­ரணி, தமிழ் மக்­க­ளின் பிரச்­சி­னை­க­ளைத் தீர்ப்­ப­தற்கு உளச் சுத்­தி­யு­டன் செயற்­ப­டு­மா­யின், மக்­கள் அதை ஏற்­கவே செய்­வார்­கள். இன்­றைய நிலை­யில் தமிழ் மக்­கள் செய்­வ­த­றி­யாத நிலை­யில் திகைத்து நிற்­கின்­ற­னர். இவர்­க­ளின் தலை­களை அழுத்­து­கின்ற பிரச்­சி­னை­களை இறக்கி வைப்­ப­தற்கு நேர்­மை­யான அர­சி­யல் தலை­மை­யொன்று அவர்­க­ளுக்­குத் தேவை­யா­க­வுள்­ளது.

சம்­பந்­தன் நேர்­மை­யான ஒரு தலை­வர் என்­றா­லும் அவ­ரது செயற்­பா­டு­க­ளில் மக்­கள் பூர­ண­மான திருப்­தி­யைக் கொண்­டி­ருப்­ப­தற்­தா­கத் தெரி­ய­வில்லை.
ஆகவே கூட்­ட­மைப்பு நிலை­மை­களை உணர்ந்து தனது செயற்­பா­டு­க­ளில் கால நேரத்­துக்­கேற்ற மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும். மக்­கள் எம்­மைத் தொடர்்­நது ஆத­ரிப்­பார்­கள் என்ற குருட்டு நம்­பிக்­கை­யைஒ­துக்கி வைத்­து­விட்டு சவால்­க­ளைச் சமா­ளிப்­ப­தற்­கான வியூ­கங்­களை கூட்­ட­மைப்­பி­னர் அமைத்­துக்­கொள்ள வேண்­டும்.

Leave a comment