களவாடிய ஈரானியர்கள் இருவர் கைது

310 0

arrast.jpg-1வென்னப்புவ நகரில் வெளிநாட்டு நாணய மாற்று நிலையம் ஒன்றில் 5 லட்சத்து 91 ஆயிரத்து 750 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தை களவாடிச் சென்ற ஈரான் பிரஜைகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கடந்த 10ஆம் திகதி, தம்மிடம் இருந்த வெளிநாட்டு நாணயத்தை மற்றும் பொருட்டு குறித்த நிலையத்திற்கு சென்ற நிலையில் இவ்வாறு பணத்தை களவாடியுள்ளனர்.

இவர்கள் ஆயிரம் அமெரிக்கா டொலர்கள், 850 சவுதி ரியால்கள் மற்றும் 3 ஆயிரம் திர்ஹாமை களவாடியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த நாணய மாற்று நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கவிராவின் மூலம் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு நாட்டில் இருந்து வெளியேற மாரவில மாவட்ட நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நாட்டில் தங்கியிருப்பதற்காக காலம் நிறைவடைந்துள்ள நிலையில், விஸா காலத்தை நீடிப்பதற்கு ஈரான் தூதரகத்தின் ஆலோசனையின் படி, சந்தேகத்திற்குரியவர்கள் சட்டத்தரணி ஊடாக நேற்றிரவு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.