சதொச ஊடாக விநியோகிக்கப்படுகின்ற தேங்காயின் விலையை 65 ரூபாவாக பேணுவதற்கு, வாழ்க்கைச் செலவு குழு அறிவுறுத்தியுள்ளது.
வாழ்க்கைச் செலவுக் குழுவின் நேற்றைய கூட்டத்தில் வைத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தையில் தற்போது தேங்காயின் விலை அதிகரித்துச் செல்கின்ற நிலையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் சதொச ஊடாக விநியோகிக்கப்படுகின்ற அரிசி வகைகளுக்கு 2 ரூபாய் மாத்திரமே இலாபமாக வைத்து விற்பனை செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.