யாழ்ப்பாணத்தில் மழை காரணமாக 3 பேர் பாதிப்பு 

358 0

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக  பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆயிரத்து 98 குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்து 862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடர் முகாமைத்துவ அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக உடுவில், சண்டிலிப்பாய், நல்லூர், சாவகச்சேரி, தெல்லிப்பழை, பருத்தித்துறை, வேலணை, கோப்பாய், சங்கானை ஆகிய  பகுதிகளில் மழை அதிக பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் இரு வீடுகளும் கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் ஒரு வீடும் முழுமையாக பதிக்கப்பட்டுள்ளன.

Leave a comment