நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு, பொது எதிரணியினர், இந்தியாவை குறை கூறுவது, தும்பை விட்டு வாலை பிடிப்பது போன்றதாகும். இதைவிட பொது எதிரணி தலைவர், தன் வழமையான திருப்பதி யாத்திரையின் போது இதுபற்றி இந்திய கடவுளிடம் முறையீடு செய்யலாம்.
எரிபொருள் உண்மையில், எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், 21 நாட்களுக்கு தேவையான எரிபொருளை எப்போதும் சேமித்து வைத்திருக்கும் வழமையை இம்முறை கடைப்பிடிக்க தவறியமையே, இன்றைய சிக்கலுக்கு பிரதான காரணமாக அமைந்துள்ளது.
நாட்டின் அதிகமான தனியார், பொது வாகனங்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் ஓடும் கொழும்பு மாவட்டத்தின் பிரதிநிதி என்ற முறையில் இது தொடர்பில் தொல்லைகளை சந்தித்துள்ள மக்களிடம் என் வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன். என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

