அமைச்சர்களை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தி விபத்தில் இருந்து தப்பியது.

351 0

F02000220அமைச்சர்கள் இருவர் மற்றும் பிரதியமைச்சர் ஒருவரை ஏற்றிச் சென்ற உலங்கு வானூர்தியொன்று நுவரெலியாவில் அவசரமாக தலையிறக்கப்பட்டது.

நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக சென்றநிலையில் இன்று காலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாச, அமைச்சர் நவீன் திசாநாயக மற்றும் பிரதியமைச்சர் இந்திக பண்டார ஆகியோர் உலங்கு வானூர்தியில் பயணித்துள்ளனர்

அசாதாரண காலநிலை காரணமாக உலங்கு வானூர்தி குறைந்த உயரத்தில் பயணித்துள்ளது.

அதன்போது உலங்கு வானூர்தி உயர் மின் அழுத்த மின்கம்பியொன்றில் மோதும் அபாயம் ஏற்பாட்டுள்ள நிலையில் நுவரெலியா கட்டுமான்ன பிரதேசத்தில் உள்ள பயிர் நிலம் ஒன்றில் உலங்கு வானூர்தி அவசரமாக தரையிறக்கப்பட்டது.