யாழ் – பல்கலைகழக மோதல் – மூன்று மாணவர்களுக்கு பிணை

382 0

Jaffna-uni-protest-6-1024x652யாழ்ப்பாணம் பல்கலைகழக மோதல் சம்பவம் தொடர்பில் மூன்று மாணவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் தொடர்பில் 4 மாணவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது மூன்று மாணவர்களும் 60 ஆயிரம் பெறுமதியான தலா ஒவ்வொரு சரீரபிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் முதலாவது சந்தேகத்திற்குரியவரான பல்கலைகழக மாணவர் ஒன்றிய தலைவர் ஏற்கனவே பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.