குருவிட்ட பகுதியில் விபத்து – மூவர் பலி

229 0

இரத்தினபுரி- கொழும்பு பிரதான வீதியில் குருவிட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்ததுடன் ஒருவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கர வண்டியொன்றும் பவுஸர் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டியில் பயணித்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a comment