கோப் அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை

235 0

அரச கணக்காய்வு சபை பொது அலுவல்கள் தொடர்பான பாராளுமன்ற குழு (கோப்) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, நிதி இராஜாங்க அமைச்சர் இரான் விக்கிரமரத்ன, கோப் குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண, பொது அலுவல்கள் தொடர்பிலான பாராளுமன்ற குழுவின் தலைவர் சுனில் ஹந்துநெத்தி, பாராளுமன்ற செயலாளர் நாயகம், நிதி அமைச்சின் செயலாளர், கணக்காய்வாளர் நாயகம், சட்டமாஅதிபர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இந்த சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Leave a comment