தனியார் வர்த்தக நிலையமொன்றில் தீப்பரவல்

210 0

பண்டாரவளை நகரில் தனியார் வர்த்தக நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

மின்னொழுக்கின் காரணமாகவே இந்த தீப்பரவல் ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

தீயில் குறித்த வர்த்தக நிலையத்தின் பெருந்தொகையான பொருட்கள் சேதமடைந்துள்ளதாகவும், இழப்பின் பெறுமதி இன்னும் கணிக்கப்படவில்லை என்றும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பண்டாரவளை காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment