வடக்கிலும் நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள் – வட மாகாண ஆளுநர்

247 0
இந்த நாட்டில் சிங்கள மக்கள் மட்டுமே நல்லவர்கள் என நாம் நினைத்துவந்தோம் ஆனால் வடக்கிலும் நல்ல மனிதர்கள் இருக்கின்றார்கள் என வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
பயாகல இந்து வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வில் நேற்று முன்தினம் பிரதம விருந்திராக வட மாகாண ஆளுநர் றெயினோல்ட் குரே கலந்து உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்
வடக்கிலும் தெற்கிலும் மனிதநேயமிக்க மனிதர்கள் இருக்கின்றார்கள். குறுகிய அரசியல் நோக்கமும் அதிக ஆசை பிடித்த தலைவர்களுமே இந்த மனிதநேயத்திற்கு வேட்டுவைக்கின்றனர். ஒரே நாடு ஒரே தேசம் என்று இருந்தால் ஒரு தலைவர் இருப்பார். ஆனால் நாடு சிறுதுண்டுகளாக இன ரீதியாகவும் மத ரீதியாகவும் பிரிக்கப்பட்டால் பல தலைவர்கள் இருப்பார்கள். சிறந்த தலைமைத்துவம் உருவாக பிணக்குகள் தீர்க்கப்படவேண்டும் அவ்வாறு செய்பவர் சிறந்த தலைவராக உருவாகுவார். அனைவரும் ஒன்றுபட்டால் தலைமைத்துவம் உருவாகும் ஆகவே அரசியல் வாதிகள் தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காக போராடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார்.

Leave a comment