இலங்கை வைத்தியர்கள் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு மருத்துவ சேவை வழங்குகின்றனர்?

288 0
இலங்கையைச் சேர்ந்த வைத்தியர்கள் சிலர் சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு மருத்துவ சேவை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
இந்தியா டுடே இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
துருக்கியில் இருந்து இந்தியாவிற்கு நாடுகடத்தப்பட்ட கேரளாவைச் சேர்ந்த அபு முகத்தில் அல்-ஹிண்டி என்ற வைத்தியர் இந்த தகவலை வழங்கியுள்ளார்.
குறித்த வைத்தியரே இந்தியாவில் இருந்தபடி இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த வைத்தியர்களை மூளைச்சலவை செய்து, சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் இணைக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கை, அவுஸ்திரேலியா, டியுனீசியா போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வைத்தியர்கள், சிரியாவில் செயற்பட்டு வருகின்றனர்.
பெண் தீவிரவாதிகளுக்கு மருத்துவ சேவையை வழங்குவதற்காக பெண் வைத்தியர்களும் இணைக்கப்பட்டுள்ளதாக அல் ஹிண்டி சாட்சி வழங்கியுள்ளார்.
இதுதொடர்பில் இந்தியாவின் புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a comment