சிங்­க­ளத் தலை­வர்­க­ளுள் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விதி­வி­லக்­கா­ன­வர் அல்­லர்!

1388 21

தமிழ் மக்­க­ளுக்கு உரித்­துக்­கள் வழங்­கப்­ப­டு­வதை எதிர்க்­கும் சிங்­க­ளத் தலை­வர்­க­ளுள் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க விதி­வி­லக்­கா­ன­வர் அல்­லர்.

அவ­ரும் 2000ஆம் ஆண்டு சந்­தி­ரிக்கா அம்­மை­யார் முன்­வைத்த அர­ச­மைப்­புத் திருத்­தத்தை நாடா­ளு­மன்­றத்­தில் தீ வைத்து எரித்­த­வர்­ தான். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் அலு­வ­ல­கத்­தி­னால் கேள்வி, பதில் வடி­வில் பத்­தி­ரி­கை­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள செய்­திக் குறிப்­பில் இந்த விட­யம் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

‘‘அர­ச­மைப்பை மாற்­றக்­கூ­டா­தென மகா­நா­யக்க தேரர்­கள் கோரி­யி­ருக்­கின்­ற­னர் என்று செய்தி வந்­தது. மகா­நா­யக்க தேரர் ஒரு­வர் வெளி­நாட்­டில் இருக்­கும்­போது இவ்­வா­றான தவ­றான செய்­தி­யைப் பத்­தி­ரி­கை­கள் வெளி­யிட்­டுள்­ள­தா­கக் கூறி­யுள்­ளார். இது பற்றி உங்­கள் கருத்து என்ன?’’ இது கேள்வி.

முத­ல­மைச்­ச­ரின் பதில், இன்று தமி­ழர்­கள் படும் அவஸ்­தைக்­குப் போதிய உரித்­துக்­கள் அவர்­க­ளுக்கு சட்­டப்­படி வழங்­கப்­ப­ட­வில்லை என்­பதை விட தமி­ழர்­க­ளுக்கு எது­வும் வழங்­கக்­கூ­டாது என்று, சிங்­க­ள­வர்­க­ளுள் ஒரு சாரா­ரி­டம் வெறி­யாக அமிழ்ந்­தி­ருக்­கும், எண்­ணமே கார­ணம்.

அந்த வெறி­தான் பண்டா – செல்­வ­நா­ய­கம் உடன்­பாட்டை கிழித்­தெ­றி­யச் செய்­தது. டட்லி – செல்­வ­நா­ய­கம் உடன்­பாட்டை கைவி­டச் செய்­தது.

தமிழ் மக்­க­ளின் விடி­வுக்­கென ஒரு­வர் நட­வ­டிக்கை எடுக்­கும்­போது மற்­றொ­ரு­வர் அதற்கு எதிர்ப்­புக்­காட்டி வந்­த­மைக்கு இந்த வெறியே கார­ணம்.

இதில் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஒரு விதி­வி­லக்­காக இருந்­தார் என்று கூற­மு­டி­யாது. சந்­தி­ரிக்கா அம்­மை­யார் 2000ஆம் ஆண்­டில் அர­ச­மைப்­புத் திருத்­தம் பற்­றிப் பேசி­ய­போது அந்­தத் திருத்த ஏற்­பா­டு­க­ளின் பிர­தி­களை அவ­ரின் கட்சி உறுப்­பி­னர்­கள் நாடா­ளு­மன்­றத்­தி­னுள்­ளேயே எரித்­த­னர்.

அந்த வெறியை அப்­போது ரணில் விக்­கி­ர­ம­சிங்க தமது கட்­சிக்கு சார்­பா­கப் பாவித்­தார் என்­றும் கூற­லாம்.

தமி­ழர்­க­ளுக்கு எந்த விதச் சலு­கை­யும் வழங்கி விடக்­கூ­டாது என்­ப­தில் சிங்­க­ளத் தலை­வர்­க­ளுள் ஒரு முக்­கி­ய­மான பிரி­வி­னர் கண்­ணும் கருத்­து­மாக இருந்து வந்­துள்­ள­னர். பௌத்த சங்­கத்­தி­னர் அதற்கு விதி­வி­லக்­கல்ல.

இவ்­வா­றான தமி­ழர் மீதான வெறுப்­பின் அடியை அல்­லது ஆரம்­பத்தை நாம் அடை­யா­ளம் காண வேண்­டு­மா­னால் 1919ஆம் ஆண்­டுக்­குச் செல்ல வேண்­டும்.

ஆங்­கி­லே­யர்­க­ளி­டம் சிங்­க­ளத் தரப்­பி­னர் பிர­தேச வாரி­யாக நாட்­டைப் பிரித்து ஒவ்­வொரு பிர­தே­சத்­திற்­கும் ஒரு­வ­ரைத் தேர்­தல் மூலம் நிய­மிக்க கோரி­னர்.

தமி­ழர் தரப்­புக்கு அது நன்மை பயக்­காது என்­றும் இன­ரீ­தி­யாக அந்­தந்த இனங்­க­ளைப் பாது­காக்­கும் வகை­யில் பிர­தி­நி­தி­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட வேண்­டும் என்­றும் தமி­ழர் தரப்­பின் பிர­தி­நி­தி­கள் வலி­யு­றுத்­தி­னர்.

சிங்­க­ள­வர்­கள் தமது அதி­கா­ரக் கையேற்­புக்கு தமி­ழர் தரப்­பின் யோசனை இடை­யூ­றாக இருக்­கும் என்­ப­தால், தமி­ழர் தரப்­பின் சேர் பொன்­னம்­ப­லம் அரு­ணா­ச­லத்தை அணுகி அவர் ஊடாக தமிழ் தரப்­பி­னரை தமது கோரிக்­கைக்கு இணங்க வைத்­த­னர்.

பிர­தேச வாரி­யான தேர்­தல் முறை­யைத் தமி­ழர்­க­ளும் சிங்­க­ள­வர்­க­ளும் ஒத்­துக் கொண்ட உடனே அதன் அடிப்­ப­டை­யில் தேர்­தல்­களை நடத்­தி­னார்­கள் ஆங்­கி­லே­யர்­கள். சிங்­க­ள­வர்­கள் பெரும்­பான்­மை­யாக பிர­தேச ரீதி­யாக நிய­மிக்­கப்­பட்­டார்­கள்.

அர­சி­யல் அதி­கா­ரம், நிர்­வாக அதி­கா­ரம் போன்­றவை சிங்­கள மக்­கட் தலை­வர்­கள் வசம் சிக்­குண்­டன. சிங்­கள ஆதிக்­கம் அப்­பொ­ழு­தி­ருந்தே ஆரம்­ப­மா­கி­யது. அதி­கா­ரத்­தைத் தம்­வ­சம் எடுத்­துக் கொண்ட சிங்­கள மக்­கட் தலை­வர்­கள் அத­னைச் சிறி­தும் தளர்த்த முன்­வந்­தா­ரில்லை.

மாறாக அரச அவை நிறு­வப்­பட்ட போது சிங்­க­ள­வர் மட்­டும் அமைச்­ச­ர­வையை நிய­மித்­தார்­கள். இன்று அர­ச­மைப்­பில் மாற்­றம் வேண்­டா­மென்று மகா நாயக்க தேரர்­களோ வேறெந்த சிங்­க­ளத் தலை­வர்­களோ கோரு­கின்­றார்­கள் என்­றால் அதற்கு ஒரு முக்­கிய கார­ணம் உண்டு.

1919ஆம் ஆண்­டில் இருந்து தாம் பெற்­றுக் கொண்ட அர­சி­யல் அதி­கா­ரத்தை எவ்­வ­கை­யி­லே­னும் விட்­டுக்­கொ­டுக்­கக் கூடாது என்­பதே அவர்­க­ளின் குறிக்­கோள்.

அதி­கா­ரம் பகி­ரப்­பட்­டால் இது­வரை சிங்­கள மக்­கட் தலை­வர்­கள் முழு நாட்­டை­யும் ஆண்டு வந்த முறைமை இல்­லா­தொ­ழிக்­கப்­ப­டும்.

மீண்­டும் தமிழ் மக்­கள் தங்­கள் தங்­கள் இடங்­க­ளில் தலை நிமிர்ந்து வாழத் தலைப்­பட்­டு­வி­டு­வார்­கள் என்ற பயமே அவர்­க­ளின் இந்­தக் கோரிக்­கைக்­குக் கார­ணம்.

சிங்­கள அர­சி­யல் தலை­வர்­க­ளுக்கு தமிழ் மக்­கள் மீது ஒரு பயம் இருந்து வந்­துள்­ளது. ஆங்­கி­லே­யர் காலத்­தில் இரு தரப்­பா­ரும் பரீட்­சை­க­ளில் ஒரு­மித்து ஆஜ­ரா­னால் தமி­ழர்­கள் எந்த துறை­யா­னால் என்ன அவற்­றில் சிறப்­பா­கப் பரீட்சை எழுதி வெற்றி காண்­பார்­கள் என்­பது அவர்­க­ளுக்­குத் தெரி­யும். ஆகவே தமி­ழர்­களை எழும்ப விடக்­கூ­டாது என்ற எண்­ணம் அவர்­கள் மன­தில் கர­வாக இடம்­பி­டித்­தி­ருந்­தது.

அவ்­வா­றான கரவு எண்­ணங்­கள் கொண்ட பலர் இன்­றும் சிங்­கள மக்­கட் தலை­வர்­க­ளி­டையே வாழ்­கின்­றார்­கள். அவர்­க­ளின் சிந்­த­னை­யும் எதிர்­பார்ப்­புமே அர­ச­மைப்பு மாற்­றம் வேண்­டா­மென்­பது.

இதன் அடிப்­படை நோக்­கம் தமி­ழர்­க­ளுக்கு ஆட்சி அதி­கா­ரம் கொடுக்­கும் போது அதனை நிர்­ண­யிக்­கும் பொறுப்­பைத் தாம் தம் வசம் வைத்­துக் கொண்டே கொடுக்க வேண்­டும் என்ற எண்­ணமே.

தேரர்­களோ வேறெ­வ­றா­யி­னும் அர­ச­மைப்­பில் திருத்­தம் கொண்­டு­வர வேண்­டாம் என்­றால் அதற்கு நான் மேலே குறிப்­பிட்­ட­வையே கார­ணங்­க­ளா­கும்.

Leave a comment