20 வயதுடைய இளைஞர் ஒருவரை காணவில்லை

227 0

குளியாபிடி – போதிமுல்ல பிரதேசத்தினை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஒரு மாத காலமாக காணவில்லை என இளைஞரின் பெற்றோர் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

வத்தளை – எலகந்த பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றில் தொழில் புரிந்து வந்துள்ள 20 வயதுடைய குறித்த இளைஞர் காணாமல் போயுள்ளதாக பதிவாகியுள்ளது.

குறித்த இளைஞர் தனது தாயுடன் இறுதியாக தொலைபேசியில் பேசியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வத்தளை காவற்துறையின் சிரேஷ்ட காவற்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment