தீபாவளி தினத்தன்று நடந்துள்ள படுகொலை

251 0

ஏறாவூர் சவுக்கடி கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகன் ஆகியோரின் சடலங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் உடற் கூற்றுப் பரிசோதனையின் பின் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

கடந்த தீபாவளி தினத்தன்று படுகொலை செய்யப்பட்டநிலையில்  இளம் தாய் மற்றும் அவரது புதல்வர் ஆகியோரின் உடலங்கள் மீட்கப்பட்டன.

சவுக்கடி முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த 26 வயதான மதுவந்தி பீதாம்பரம்  மற்றும் அவரது 11 வயது மகனான பீதாம்பரம் மதுஷ‪ன் ஆகியோரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூவர்  சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு அடுத்த மாதம் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கொலைக்குப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் ஒரு கோடரியையும் காவல்துறையினர் கடந்த வியாழக்கிழமை கைப்பற்றியிருந்தனர்.

படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவன் குவைத் நாட்டில் பணிபுரிந்துவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment