முல்லைதீவு பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்றில் இருந்து கீழே வீழ்ந்து காயமடைந்த இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்தள்ளது.
எம்பிலிப்பிடிய பிரதேசத்தினை சேர்ந்த 34 வயதுடைய இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் 6 பேர் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நீர் கொழும்பிலிருந்து பாண்டிருப்பு நோக்கிச் சென்ற மகிழுந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்ததினால் மரத்தில் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.
காயமடைந்த 6 பேரும் மேதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.